ஊழல் இல்லாத இந்தியாவே எனது கொள்கை: பிரதமர் மோடி சுதந்திர தின உரை


Admin 1 year ago தேசிய அரசியல்

டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி 10-வது முறையாக தேசியக்கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்.

அடுத்த முறை இந்த செங்கோட்டையில் நான் கொடியேற்றும் போது நாட்டின் சாதனைகளை கூறுவேன் என்று பிரத்மர் மோடி, 77-வது சுதந்திர தின உரையில் பேசினார். அடுத்த முறை நாட்டின் சாதனைகள் மற்றும் வளர்ச்சிகள் உங்கள் முன் வைக்க உள்ளேன் என்று நம்பிக்கையுடன் கூறினார்.

எதிர்க்கட்சிகளின் அரசியல் கொள்கை என்பது முழுக்க முழுக்க குடும்பத்திற்கானது. குடும்பத்திற்காக மட்டும், குடும்பத்திற்கே அனைத்தும் என்பதே எதிர்க்கட்சிகளின் கொள்கை. நாட்டில் ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன். ஊழல்வாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் எனக்கு எதிர்ப்பு அதிகரித்துள்ளது” என்று பிரதமர் பேசினார்.

நாட்டில் தொடர் குண்டுவெடிப்புகள் என்ற நிலை தற்போது இல்லை. நக்சல்கள் மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் முழுமையாக குறைக்கப்பட்டுள்ளன. மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்ததற்கு மாற்றங்களை கொண்டு வந்து கொடுத்துள்ளேன். இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை ஊழல் கட்டுப்படுத்திய நிலையில், அந்த தடையை நாங்கள் நீக்கியுள்ளோம். 

அடிக்கல் நாட்டுவதுடன் நிற்காமல் திட்டங்களை தொடக்கி வைக்கிறோம். இந்தியாவின் பணவீக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். 200 கோடி கொரோனா தடுப்பூசிகளை நாம் வெற்றிகரமாக செலுத்தியுள்ளோம் . ரூ.15000 கோடி மதிப்பில் விஸ்வகர்மா யோஜனா திட்டம் செயல்படுத்தப்படும். 200 கோடி கொரோனா தடுப்பூசிகளை நாம் வெற்றிகரமாக செலுத்தியுள்ளோம். நாட்டில் தொடர் குண்டு வெடிப்புகள் என்ற நிலை தற்போது இல்லை.

உலகிற்கே மிகப்பெரிய நம்பிக்கையை இந்தியா விதைத்துள்ளது. தற்போது எடுத்து வரும் நடவடிக்கைகளின் தாக்கம் அடுத்த ஆயிரம் ஆண்டுகள் இருக்கும். 30 வயதிற்கு குறைவான இளைஞர்கள் அதிகம் உள்ள நாடாக இந்தியா உள்ளது என்று பிரதமர் கூறினார்.

அரசியல் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்