ஐடி துறையில் உள்ளவர்களும்.. ஆடு வளர்க்கும் திட்டத்தில் முதலீடு செய்து மாதாமாதம் அதிக லாபம் பெறலாம்
விலையில்லா ஆடுகள் மூலம் புதிய விவசாய புரட்சியை அக்ரோடெக் நிறுவனம் செய்து வருகிறது. நமது இளைஞர்களின் கனவானது ஐடி துறையில் இருந்து விவசாயத்துறை பக்கம் திரும்பி வருகிறது என பல்வேறு புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
அதற்கேற்றாற்போல், அக்ரோடெக் என்ற விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் நிலமற்ற விவசாயிகளுக்கு நிரந்தர வருமானத்திற்கு வலு சேர்த்துள்ளது. இந்த நிறுவனத்தின் வியாபார நுணுக்கம் முதலீட்டார்களுக்கும் எல்லையற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
விழுப்புரத்தில் உள்ள அக்ரோடெக் நிறுவனம் (Agrotech Integrated Farmer Producer Company Limited) தமிழகத்தில் மேலும் உளுந்தூர்பேட்டை திண்டிவனம் பாண்டிச்சேரி கள்ளக்குறிச்சி நாகர்கோயில் மார்த்தாண்டம் திண்டுக்கல் திருவாரூர் அரியலூர் மாவட்டங்களிலும் வெற்றிகரமாக கொடிகட்டி வரும் நிறுவனங்களில் முக்கியமான ஒன்றாகும்.
இந்நிறுவனம் விவசாய மேம்பாடு மற்றும் கிராமபுற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக தொடங்கப்பட்டுள்ளது. மத்திய விவசாய அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி உருவாக்கப்பட்டுள்ளது இந்த நிறுவனம். அக்ரோடெக் நிறுவனத்தில் உறுப்பினர்களாக உள்ள ஒவ்வொருவருடைய வாழ்வாதாரத்தை முன்னேற்ற பல்வேறு படிகட்டுகள் உள்ளன
உதாரணமாக நிலமற்ற விவசாயிகளை கண்டறிந்து அவர்களை கைதூக்கிவிடும் விதமாக அவர்களிடம் இலவசமாக ஆடுகளை கொடுத்து, அதற்கு சிறப்பு பயிற்சிகள் அளித்து அந்த ஆடுகள் மூலம் வருவாயை பெருக்குவதுதான் நிறுவனத்தின் ஸ்மார்ட் திட்டமாக உள்ளது. மேலும் நாட்டு கோழி வளர்ப்பு மற்றும் நாட்டு மாட்டு சாணத்தில் கைவினை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி அளித்து அதனை சந்தை படுத்தி வருமாணத்திற்கு வழிவகுக்கின்றனர்