மூத்த குடிமக்கள் பேரவை சார்பில் சமத்துவ பொங்கல் விழா


5 5 months ago பொதுத் தகவல்கள்

ஜன.8- தஞ்சை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட மூத்த குடிமக்கள் சார்பில், செவித்திறன் குறைபாடு உடையோர்களுக்கான  சமத்துவ பொங்கல் விழா மூத்த குடிமக்கள் பேரவைத்தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது  முன்னதாக டாக்டர் சேதுராமன் வரவேற்றார். பேரவை செயலாளர் சுப்ரமணியன், அமைப்பு செயலாளர் தஞ்சை ராமதாஸ், இணைச்செயலாளர் குருநாதன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சமத்துவ பொங்கல் வினியோகத்தை சட்ட ஆலோசகர் வக்கீல் கோ. அன்பரசன் தொடங்கி வைத்தார். இதில் தஞ்சை மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வர் மருது துரை, பாதிரியார் வின்சென்ட், ஹாபில் முகமது அபுபக்கர், பள்ளியின் தலைமை ஆசிரியை சித்ரா ஆகியோர் வாழ்த்தி பேசினர். பேரவையில் மாத நாட் காட்டி வழிகாட்டியினை டாக்டர் சாந்தி வெளியிட்டார். நிகழ்ச்சியில் துணைத்தலைவர்கள் திருமலை, எஸ்தர்தாஸ், இணைச்செயலாளர்கள் துரைராஜன், அறிவழகன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பேரவை துணைத்தலைவர் பழனிவேலு நன்றி கூறினார்.

பொதுக் தகவல் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்