தஞ்சை மாநகரில் உணவு தயாரிப்பில் தலை சிறந்த நிறுவனமான ராசி கேட்டரிங் மாநகரில் பல இடங்களில் கேட்டரிங், இட்லி கடை, தோசை கடை நடத்தி வரும் நிலையில் தற்போது தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் அருகில் ரஹ்மான் நகரில் தங்களுடைய புதிய கிளையான ராசி டிபன்ஸ் கடை நாளை திறக்க உள்ளனர். இக்கடையை நாளை 13/12/2024 அன்று மாலை 5 மணி அளவில் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட உள்ளது. நிறுவனத்தின் உரிமையாளர் திரு. லயன்ஸ்.ராஜா அவர்கள் தஞ்சையில் குறைந்த விலையில் தரமான உணவு வழங்குவது மட்டுமல்லாமல் பல வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை வழங்குவது எங்களின் பிரதான குறிக்கோள் ஆகும் என்றும் இது போல் இன்னும் பல கிளைகள் திறக்கப்பட போவதாக தெரிவித்தார்.