புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி : டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் நாளைமுதல் கனமழை


5 6 months ago பொதுத் தகவல்கள்

வங்கக்கடலில் இன்று புதியகாற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதன் காரணமாக டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு திசையில் நகர்ந்து வலுவிழக்கக்கூடும்.

அதேநேரம், தெற்கு அந்தமான் கடல் பகுதி, அதை ஒட்டிய பகுதி களின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (டிச.15) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி களில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேலும் வலுப்பெற்று, அடுத்த 2 நாட்களில் மேற்கு, வடமேற்கு திசையில், தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதனால், தமிழகத்தில் 20-ம் தேதி வரை மழை நீடிக்கும்.


பொதுக் தகவல் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்