தஞ்சாவூர் மாவட்டம் கள்ளம் பெரம்பூர் ஊராட்சியில் மழையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி. ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி அலுவலர்கள் மணிகண்டன் சக்திவேல் ஆய்வு.


5 6 months ago தமிழ்நாடு அரசு செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் மழையால் மாநிலம் முழுவதும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 

தஞ்சாவூர் மாவட்டம் கள்ளம் பெரம்பூர் ஊராட்சி மழையால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.‌ இதனை தொடர்ந்து பொது மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கள்ளப் பெரம்பூர்  இரண்டாம் சேத்தி ஆரம்ப பள்ளியில்  தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிகண்டன் மற்றும் சக்திவேல் ஆய்வு செய்தனர். 

அரசு செய்திகள் தொடர்பான செய்திகள்