காட்டு யானை போல உடல் பலம் பெற


Admin 1 year ago சித்த மருத்துவம்

காட்டு யானை போல உடல் பலம் பெற மன்னர்கள் இந்த அரிசியை தான் சாப்பிட்டார்களாம்! அது என்ன அரிசி? இப்போதும் கிடைக்கிறதா? எப்படி சாப்பிட வேண்டும்?

அந்த காலங்களில் எல்லாம் மூன்று போகமும் விவசாயமும், ஏக்கர் கணக்கில் தோட்டங்கள் என்று விவசாயத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். பல தலைமுறையினருக்கு முந்தைய மன்னர்கள் காலத்தில் உடலை கட்டுக்கோப்பாக வைக்கவும், நோய் நொடிகள் இல்லாமல் இருக்கவும் பல வகையான அரிசிகள் செழித்து வளர்ந்தன. நம் நாட்டில். பலரால் மறைக்கப்பட்ட இந்த அரிசிகள் இன்றளவிலும் விளைவிக்கப்பட்டு விற்பனைக்கு இருக்கின்றன. ஆனால் அது புழக்கத்தில் மக்கள் பயன்படுத்துவது இல்லை. இந்த மாதிரியான அரிசிகளை சாப்பிட்டால் தீராத உடல் பிரச்சினைகளை வருமுன் காக்கலாம் அல்லது வந்தவற்றையும் விரட்டி அடிக்கலாம். அப்படிப்பட்ட ஒரு சக்தி மிகுந்த அரிசி தான் இது! இது என்ன அரிசி? எப்படி இதை சாப்பிட வேண்டும்? என்பதைத் தான் இந்த ஆரோக்கியம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம். சுமார் ஏழு அடிக்கும் உயர்வாக செழித்து வளரக் கூடிய இந்த அரிசி 180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை மகசூல் ஆகக் கூடியது. காட்டில் வளரக்கூடிய இந்த அரிசி காட்டு யானையின் பலத்தை நமக்கு கொடுக்கக் கூடியது என்பதால் இதன் பெயர் ‘காட்டு யானம் அரிசி’ என்று வந்தது. தமிழ்நாட்டின் பூர்வீக அரிசியான இந்த காட்டுயானம் அரிசி அரிதாக கிடைக்கக் கூடியது. இதை ஆன்லைனில் கூட இப்போது ஷாப்பிங் செய்யக்கூடிய வகையில் இருக்கின்றது. சக்தி வாய்ந்த இந்த காட்டுயானம் அரிசியின் விலை சற்று அதிகம் என்றாலும் இதை கஞ்சி வைத்து ஒரு மண்டலம் குடித்து வருபவர்களுக்கு சர்க்கரை நோய் முற்றிலும் கட்டுப்படும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த அரிசியில் சாதத்தை சமைத்து, கருவேப்பிலை சேர்த்து தண்ணீர் ஊற்றி ஊற வைத்து அப்படியே மறுநாள் காலையில் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய்க்கு எதிராக செயல்படும். காட்டு யானம் அரிசி சாதம் செய்முறை விளக்கம்: காட்டுயானம் அரிசி சாதமாக செய்ய சற்று அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். அரிசி கடினமாக இருப்பதால் வேகுவதற்கு கூடுதல் கவனம் தேவை. ஆறிலிருந்து 12 மணி நேரம் வரை நீங்கள் இந்த அரிசியை நன்கு களைந்து சுத்தம் செய்து ஊற வைக்க வேண்டும். அரைத்து கஞ்சியாக குடிக்க வேண்டும் என்றால் ஆறு மணி நேரம் ஊற வைக்கலாம். சாதமாக வடித்து சாப்பிட வேண்டும் என்றால் 12 மணி நேரம் ஊற வையுங்கள்.


c>s Ø>FTïD

மருத்துவம் தொடர்பான செய்திகள்